ஒலி வடிவம் : Your browser doesnot support to play தரவிறக்கம் : aththaiMakal.mp3 [1.36MB] அத்தை - உந்தன் முத்தான மகளை அவள் மேல் பித்தான எந்தனுக்கு சொத்தாக்கும் எண்ணம் உந்தன் சிந்தையில் இன்னும் வித்தாகவில்லையோ? தயிர் கடையும் மத்தாக - எந்தன் உயிர் கடைகின்றாள் அத்தை உந்தன் செல்வ மகள் முகமதை முழுநிலா என்று சொன்னால் பூரணமாகாது ஏனெனில் முழுநிலா என்றும் முழுசாய் குளிர் விட்டுச் சிரிக்காது! தளிர் கரம் கொண்டு பளீர் எனக் கன்னத்தில் அறைந்தாலும் பட படக்க மாட்டேன் அத்தை - அந்த பட்டு விரல்களின் பாஸையில் பல சங்கதி காண்பேன் அத்தை! கறுப்பு என்றென்னைப் பழிக்காதே அத்தை இராமன் முதல் அர்ச்சுனன் வரை கறுப்பில் கரை கண்டார் - ஆனாலும் யாரவரில் கறை கண்டார்? மேனி நிறம் பார்க்காதே அத்தை அன்பு நிறம் பார் திறம் திறம் என்று தித்திப்பாய்...! நாலெழுத்துப் படிக்கவில்லை என்று நகைக்காதே அத்தை ஊரோடு உலகறியும் நல்லறிவு எனக்குண்டெனும் ஓரறிவு உனக்கு வேண்டும் அத்தை! கையில் இல்லை நாலு காசென்று கலங்காதே அத்தை - எந்தன் கனவுக்கு உலகை நெய்யும் வலி உண்டென்று அறிவாய் அத்தை! பித்தம் கூடிப் பிதற்றவில்லை அத்தை நித்தம் ஆய்ந்து அறிந்...
Comments
அருமையான விளக்கமாக அமைந்த
கவிதையும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...