Posts

விட்டகலா நினைவுகள்!

Image
கவியரங்கம் ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை இது. ஒலி வடிவமும் அதன் கீழ் வாசிக்கும் வகையில் கவிதையையும் இணைக்கிறேன்.   தமிழ் வாழ்த்து தோற்றமறியோம் இவள் தொன்மை அறியோம் தோகை இள மயில் போல் இவள் காட்டும் அழகறியோம் மூத்த பெண்ணாம் எம் முகவரி இவளாம்! தாயே தமிழே வணங்குகிறேன் உனை இக்கவிக்கு உனைவிட்டால் வேறு யார் துணை! அறிமுகம் யார் இப்பயல் என நீவீர் கேட்டால் பதில் ஏதும் இல்லை என்னிடம்! அடியேனுக்கே அது தெரியாதபோது சபையோருக்கு எப்படி உரைப்பது? ஆனாலும் ஒரு குறிப்பு தமிழ் பழகும் மழலை போல எழுதுவேன் பல கவிதை இதுவென எழுந்தாடுவேன் ஆகா கவிதை இதுவென நீவீர் மெய்மறந்திருந்தால் மறு நிமிடம் கால் வாருவேன்! கடைசி வரை தமிழன் புத்தி அது வென்பதால் பிழை பொறுத்தருள்க என் கவிதைக்கு காது கொடுத்தருள்க! கேட்கக் கூடாத பலவற்றை கேட்ட காது தானே? கொஞ்சம் தமிழும் கேட்கட்டும் கொஞ்சும் தமிழும் கேட்கட்டும்...

காத்திருப்பு…! (வேறு)

Image
  ஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...! 14 ஆடி 2008

கசக்கி எறிந்த ஓவியம்!

Image
நீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம்! நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் துள்ளி வந்த கடல் அலை காணோம்! கடலை வண்டி தள்ளிப் போகும் வயசான கிழவர் இல்லை... அக்கம் பக்கம் பார்த்துவிட்டு முத்தமிடும் உன் குறும்பில் குங்குமமாய்ச் சிவக்கும் என் நிலா முகம் போனதெங்கே? கடற்கரை கிணற்றில் தண்ணீர் அள்ளிப் போகும் பெண்களின் பார்வை படாது என் முகம் மறைக்கும் உன் உருவம் கரைந்தது எப்படி? அடிக்கடி என் பெயரை உச்சரிக்கும் உதடுகள் கடற்கரை மணலிலும் எழுதிப் பார்த்த அழகு மறைந்தது எப்படி? வசதியாக இப்படிப் பல நினைவுகள் மறைந்து வரைந்த ஓவியம் எதற்கு என்று கசக்கி எறிந்தாயோ என் காதலனே?   09 புரட்டாதி 2008

காத்திருப்பு…!

Image
திரை விலத்தக் குறைவில்லாது காற்று வரும்... காதலும் வந்ததெப்படி காதலனே? பிறை போலிருந்த அம்புலி வளர்ந்து முழு நிலவானது போல்... சிறு கறை போலிருந்த உன் உருவம் ஓங்கி வளர்ந்து என்னுள்ளம் நிறைத்த விந்தையென்ன சொல்...! தினமும் திரை விலத்திச் சிலை போல் காத்திருக்கிறேன்... உனக்காய்... மனச்சாட்சி மறக்கும் மனிதச் சாட்சிகளை விட மகத்தான இயற்கையே இதற்குச் சாட்சி! நான் காத்திருக்கின்ற இரவுகளில் பார்த்துவிட்டுப் போகும் நிலவைக் கேள்... அவ்வப்போது நிலவைக் கொற்றித் தின்பதாய் பறக்கும் பட்சிகளைக் கேள்... அவை சொல்லும் என் காத்திருப்பின் நீண்ட இரவுகள் பற்றி!   ------------------------- 23 புரட்டாதி 2008

குழந்தை பிறந்த போது…

எந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக்கிது எத்தனையாவது வருகையோ? கால் கொண்டு உதைக்கின்றாள் கை கொண்டு அடிக்கின்றாள் பூவுக்கு கை, கால் முளைத்ததென எண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்! சிறு வாய் திறந்து கொட்டாவி விடுகிறாய் மெல்ல எட்டியே பார்க்கிறேன் நான் உலகமேதும் உள்ளிருப்பதாய் தெரியவில்லை - ஆனாலும் நீயே என் உலகமென ஆன விந்தையதுவும் புரியவில்லை!   ஒலி வடிவம்: ------------------------ 09 புரட்டாதி 2012

காதல் விருந்து!

காதல்  அடிக்கடி  விருந்துண்ண  அழைக்கின்றது இலை விரித்து பந்தி  பரிமாறும்  வேளையில்  அடுத்த  பந்தியில் அமருமாறு  அறிவிக்கின்றது!

வேலை முடிந்து வீடு திரும்புகையில்...

இரவு நேர வேலை முடிந்து பஸ்சில் வரும்போது பல சிந்தனைகள் மனசில்.... கவியுள்ளம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது... முடிவில்லாவிட்டாலும் தொடங்கிய வரிகளை பதிந்து கொள்ளத் தோன்றியது. /* காதல் நிராயுதபாணிகளையே குறிவைத்து நடக்கும் அழகிய யுத்தம் மலர்க் கணை எய்தவளே மடியில் தாங்கி தருவாள் முத்தம்! தோற்றவன் மடியில் வென்றவள் இங்கே தோற்றவர் தான் வென்றவர் */ /* வீதியில் நடந்து வரும்போது இரவு கொட்டிய Snow இல் புற்கள் எல்லாம் வெள்ளையாக... உடனே நான், புற்களுக்கெல்லாம் நரை விழுந்தது எப்படி? */