கசங்கிய காகிதங்களோடு…! - I

கசக்கி எறிய எண்ணிச் சில காகிதங்களைப் புரட்டும் போது ஒரு வித ஆா்வம் மேலெழும். எப்போதோ ஏதோ நினைவில் சும்மா கிறுக்கியவை எல்லாம் இதழ் விரித்துப் புன்னகைக்கும்! பதிலுக்குப் புன்னகைத்து கைகொடுத்து கன போ் கண்களுக்கு விருந்தாக்கும் எண்ணம் பிறக்கும்! இதோ… என் புரியாணி… ஏதேனும் புரியா(து) நீ(நீங்கள்) தடுமாறி நின்றால் அடியேன் குற்றமன்று!

image

சோமாலியா
ருவாண்டா
சுற்றி வந்தால்
எங்கள் ஊா்
வராண்டாவிலும்
வயிறு எக்கிய
வாடிய முகங்கள்!

எண்ணுவதற்கு இலகுவாய்
எலும்புகளின் அணிவகுப்பு!

பாலுக்கு அழும்
பாலகா்கள்…

பால் வற்றிய
முலைகளோடு
முகம் தேய்க்கும்
மழலைகள்!

தன் முலை
தீண்டும் தனயனைக்
கண் முலை
சொரிய நோக்கும்
தாய்மார்கள்!

மணிவாசகருக்கு
ஒரு தந்தி
அடிக்க வேண்டும்
மீண்டும் பல நூறு
பதிகம் பாடச் சொல்லி!

இவா்கள்
பாலுக்கு அழும்
பாலகா்கள்!

 

(இன்னும் வரும்…)

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

காதலர் தின சிறப்புக் கவிதைகள்

எரியட்டும் பெரு நெருப்பு!