யாழ் களக் கிறுக்கல்கள் - IX
கிறுக்கல் 27:
முத்தங்களை நான்
தருவேன்
அர்த்தங்களை நீ
புரிவாயோ?
வித்தகக் கவியிவன்
விண்ணாளாவும் தமிழோடு
விளையாடும் வெள்ளை நிலாவே
கொள்ளையழகும் சின்னவிதழும்
நான் சுவைப்பேன்
சிணுங்காமல் சிறைப்பட்டு
நீ கிடப்பாயா?
பாஷை பல பேசி
நேர முட்களை
சோம்பலோடு நோக்குவதென்ன?
ஆசை புரிய வைக்க
அன்பால் சிறை வைக்க
மீசை குற்றினாலும்
மிடுக்காக நான் தரும்
முத்தங்களே பல
பாஷை பேசுமடி!
பதிலாக நீ ஏதும்
பேசாதே...
சரியாகக் கணக்கிட்டு
முத்தங்கங்களைத்
திருப்பித் தருவாயா?
-----------------
கிறுக்கல் 28:
நீ
எய்கின்ற கவிப் பூக்கள் நன்று
நிமிடத்தில் பல கவிதை
எனக்குள்ளே தோன்றதடி இன்று!
பூ
பூக்கின்ற மெல்லிய ஓசை
செடி அறிந்திடும்
பெண் மனசில் பூக்கின்ற
காதலின் பாஷை
அவள் கண்ணில் புரிந்திடும்!
விழியாலே அழைப்பாள்
விரதங்கள் உடைப்பாள்
மெளன மொழி பேசுவாள்
மயக்கத்தில் ஆழ்த்துவாள்
முதல் ஸ்பரிசத்தில்
இதயத்தில் சிறகு முளைக்கும்
அவள் அருகிருந்தால்
எல்லாமே அந்நியமாகும்!
காதல்
சொல்வது போல்
அழகானதல்ல - அது
அழகிய
அவஸ்தையானது!
-----------------
கிறுக்கல் 29:
எப்படிப் புரியும்
இவர்களுக்கு
உனக்கும் எனக்குமிடையில்
உருகாத மெழுகுவர்த்தியொன்று
ஒளி தருவது...!
எப்படிச் சரியும்
இத் தேகம்
உன் பஞ்சுத் தலையணை மீது
பிஞ்சு விரல்கள்
ஸ்பரிசம் தராமல்!
எப்படி அறியும்
இவ் உலகம்
உனக்கும் எனக்குமிடையில்
பொதுவான மொழி
அன்பு என்பதை!
எப்படி அறிவார்
நம் பெற்றோர்
நம்மிருவர் வாழ்விலும்
நலம் வரும் என்பதை!
உன் நலனில் நானும்
என் நலனில் நீயும்
மனசுக்குள் அழுகின்றவேளை
நம் நலனில்
நமையாளும் இறைவன்
கை தரானா?
தருவான் என்கின்ற
நேர் சிந்தனையோடு மட்டும்
வாழ்கின்றேன்!
-----------------
கிறுக்கல் 30:
உனக்காக
தருவதற்கு
என்னிடம் எதுவுமில்லை
உன் நினைவுகளைத்
தவிர...
தனக்காக
எதையும் சிந்திக்காது
காதல்...
நமக்காக என்ற
சிக்கன வார்த்தையில்
சிறைப்படுவதில்
தனிச் சுகம்!
உயிரையும்
தருவேன் என்று
உளறுவதெல்லாம்
மகா கிறுக்கு!
வாழ்கைப் புத்தகத்தை
புரட்டும் போது
கூடவே நானும்
இருப்பேன் என்பதில்
தான் சுகம் இருக்கு!
வார்த்தைகளில் ஜாலம்
காட்டிப் புரியவைப்பதில்
இல்லை அன்பு!
Comments