நாளைய பொழுது எமக்காய்...!

j0409304

சொன்னால் தான்
புரியுமா என்
கண்ணே
மனசுக்குள் பல
வண்ணப் பட்டாம்பூச்சி
பறப்பது...

உள்ளுக்குள்
தெரிந்தாலும்
உண்மையிது
புரிந்தாலும் நான்
சொல்லிக் கேட்பதில்
உனக்குப் பரவசம்!

நாடுகள்
எமைப் பிரிக்கும்
எம் உயிர் தாங்கும்
கூடுகள் தான் அதை
மதிக்கும்...
எம் உயிருக்கு
ஏதடி இடைவெளி?
உலவலாம்
எங்கெங்கும்
உலகமிது சமவெளி!

விண்ணில் ஏறுவோம்
விண்மீன் எறிந்து
விளையாடுவோம்
மண்ணில் இறங்கிப்
பாடுவோம்
பூக்களின் மகரந்தப் பொடி
அள்ளித் தூவுவோம்
வண்டுகள் எமை மொய்க்கும்
உன் கண்ணிரண்டு கண்டு
தம்மினமோ என்று
யோசித்து நிற்கும்!

யாசித்து
வருவதில்லையே அன்பு
நமைப் போல்
நேசித்து நின்றால்
ஓடிவரும் முன்பு!

ஆண்டுகள் பல
காதலிப்பதால்
காதல் ஆழமாகுமோ?
நேற்று வந்த நீ
என் உயிர் உருக
வைக்கவில்லையா?
காலம் கடந்தது
இந்தக் காதல் ஆகுமே!

கன்னி நீ
பிரிந்து போனால்
இந்தக் கூடு விட்டு
உயிர் போகுமே!

பாடு கண்ணே
பாடு...
நாளைய பொழுது
எமக்காய் விடியும்
என்றே பாடு...!

-------------------------------------------------

படம் உபயம் : Microsoft Clipart / நன்றி

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்