சுதந்திர தினம்!

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ...

---------------------------------------------------------------------------------

வாலைச் சுருட்டிக்
கொண்டு
அவரவர் வீட்டுக்குள்ளே
பதுங்கி இருங்கள்
இன்று
சுதந்திர தினம்!

சுருட்டு வாங்கப் போகும்
தாத்தாவும் கவனம்!
உன்னையும்
சுருட்டிக் கொண்டு
சென்றிடுவர்!

சட்டப்புத்தகம்
சட்டக் கோவைகளால்
கொழுத்திருந்தாலும்
நடைமுறைப் படுத்துவதில்
இன்னும்
அதே மெலிவு தான்!

சும்மா
உதடுகளால்
உச்சரிக்கப்படுவதெல்லாம்
உயிர்த்தெழும் என்பது
உதவாத கதை!

வெறும்
கோஷங்களையும்
கொள்கை
முழக்கங்களையும்
கக்கத்தில்
வைத்து கொண்டு
களமிறங்கிய
காரசாரமான
அரசியல்வாதிகள்!

மீசை
இருக்கின்றதே என்று
முறுக்குவதைத் தவிர
வேறெதையும்
மிடுக்காக முடிக்கத்
தெரியாதவர்கள்!

சகல பாதுகாப்புடனும்
அரச தலைவர்
கொடியேற்றுவார்!
சுதந்திர தின உரை
படிக்கப்படும்...
வீடுகளில் மக்கள்
தொலைக்காட்சி
முன்னமர்ந்து
வேடிக்கை பார்ப்பர்!

நம்பினால் நம்புங்கள்
இன்று சுதந்திர தினம்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

காதலர் தின சிறப்புக் கவிதைகள்

எரியட்டும் பெரு நெருப்பு!