எந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக்கிது எத்தனையாவது வருகையோ? கால் கொண்டு உதைக்கின்றாள் கை கொண்டு அடிக்கின்றாள் பூவுக்கு கை, கால் முளைத்ததென எண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்! சிறு வாய் திறந்து கொட்டாவி விடுகிறாய் மெல்ல எட்டியே பார்க்கிறேன் நான் உலகமேதும் உள்ளிருப்பதாய் தெரியவில்லை - ஆனாலும் நீயே என் உலகமென ஆன விந்தையதுவும் புரியவில்லை! ஒலி வடிவம்: ------------------------ 09 புரட்டாதி 2012
Comments
பூக்கட்டும் புத்தாண்டு
புது மலர்கள் பூக்கட்டும்!
ஈழம் மலரட்டும்
இனமானம் பரவட்டும்!
தமிழ்ன் நான் என்ற
பெருமை உணரட்டும்!
தன்னால் முடியும்
நெஞ்சம் நிமிரட்டும்!
கொடுப்பதில் வரும்
மகிழ்வை உணர்ந்திடுவோம்!
உழைப்பதில் உண்மை
உயர்வை அடைந்திடுவோம்!
அன்பால் பேசியே அமுதாம்
தமிழ் வளர்ப்போம்!
பொங்கட்டும் பொங்கல்
புத்தாண்டு மலரட்டும்!