This website contains Tamil poems written by myself. Subject of the poem varies from love to social awareness. Many of the poem reflect the real feelings when I came across some situations.
படம் பார் கவி எழுது - I
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கீழே இணைக்கப்பட்டுள்ள படம் பார்த்து கற்பனைக் குதிரைகளை தட்டி விடுங்கள். வடிவான கவிதைகள் இணைக்கப்படும்...
ஒலி வடிவம் : Your browser doesnot support to play தரவிறக்கம் : aththaiMakal.mp3 [1.36MB] அத்தை - உந்தன் முத்தான மகளை அவள் மேல் பித்தான எந்தனுக்கு சொத்தாக்கும் எண்ணம் உந்தன் சிந்தையில் இன்னும் வித்தாகவில்லையோ? தயிர் கடையும் மத்தாக - எந்தன் உயிர் கடைகின்றாள் அத்தை உந்தன் செல்வ மகள் முகமதை முழுநிலா என்று சொன்னால் பூரணமாகாது ஏனெனில் முழுநிலா என்றும் முழுசாய் குளிர் விட்டுச் சிரிக்காது! தளிர் கரம் கொண்டு பளீர் எனக் கன்னத்தில் அறைந்தாலும் பட படக்க மாட்டேன் அத்தை - அந்த பட்டு விரல்களின் பாஸையில் பல சங்கதி காண்பேன் அத்தை! கறுப்பு என்றென்னைப் பழிக்காதே அத்தை இராமன் முதல் அர்ச்சுனன் வரை கறுப்பில் கரை கண்டார் - ஆனாலும் யாரவரில் கறை கண்டார்? மேனி நிறம் பார்க்காதே அத்தை அன்பு நிறம் பார் திறம் திறம் என்று தித்திப்பாய்...! நாலெழுத்துப் படிக்கவில்லை என்று நகைக்காதே அத்தை ஊரோடு உலகறியும் நல்லறிவு எனக்குண்டெனும் ஓரறிவு உனக்கு வேண்டும் அத்தை! கையில் இல்லை நாலு காசென்று கலங்காதே அத்தை - எந்தன் கனவுக்கு உலகை நெய்யும் வலி உண்டென்று அறிவாய் அத்தை! பித்தம் கூடிப் பிதற்றவில்லை அத்தை நித்தம் ஆய்ந்து அறிந்...
வணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.... நன்றி. இல. கவிதை ஒலி வடிவம் 01 அத்தை மகள் 02 இவள் எப்படி? 03 மங்கை இவள் பேசினால்… 04 மனசு என்னும் மந்திரக் கிண்ணம் 05 நடந்த கதை!
நடந்து சென்ற 2007 நன்மை பயக்கவில்லை நாடி வந்த 2008 ஏ நன்மை பல கொண்டு வா! அழுகையும் அவலமும் அனுதினம் கேட்ட செவிகளுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம் கொண்டு வா... நடந்த போர்களில் போன உயிர்கள் உடைந்த மனங்களுடன் ஓடிய மக்கள் கிடைத்ததை உண்டு ஏப்பம் விட்ட பரிதாபங்கள் அனைத்தும் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஓடி மறைந்திட ஓர் புது வழி சமைத்து வா! தாய் ஓர் இடம் தனயன் ஓர் இடம் வாழ்ந்திடல் தகுமா? ஊர் ஓர் இடம் உற்றார் உறவினர் ஓர் இடம் - நான் மட்டும் இங்கு வாழ்தல் முறையோ? பெற்றமும் கன்றும் பிரிந்து வாழ்ந்தால் பாசமும் அன்பும் தான் விளைவதெங்கே? சொல் வீரராய் இருப்பார் செயல் வீரராய் ஆவதெப்போ? உள் மனதில் உறங்கிய கனவுகள் உயிர் பெற்று வாழ்வது தப்போ? கல் மனத்தார், கொலைக்கஞ்சார் கணப்பொழுதும் வாழ்தல் ஏற்போ? சொந்த ஊரில் சொற்பமும் சுகமாய் வாழமுடியாத வாழ்க்கை சத்தோ? சிறுமையும் பெருமையும் இடம் ஒவ்வா இடத்தில் உரைத்திடல் தகுமோ? சென்ற ஆண்டு சேர்த்து வைத்த சோகங்கள் வந்த ஆண்டு நீ தீர்த்து வைத்தல் வேண்டும் வருங்காலத்தில் ஓர் வலது காலாய் நீ தடம் பதித்தல் வேண்டும் பின்னும் நீ சமாதான வீணைகளை மன...
Comments