தம்பிக்கு...

நாளை நாளை என்றொரு நாளை
எண்ணி மனம் வெம்பிப்
போகாதே தம்பி - அந்த
நாலுந் தெரிந்தவன் நடத்தும்
நாடகத்தில் குறை சொல்லி
மாளாதே தம்பி

விதை விதைப்பதும்
அது முளைப்பதும்
உந்தன் கையிலா தம்பி?
எல்லாம் இயற்கையின்
கையினை நம்பி!

கவலைகள் கிடக்கட்டும்
காரியம் நடத்திவிடு

மலைகள் எதிர்க்கட்டும்
துணிவாய் இருந்துவிடு

பிறந்தது இன்று
வாழ்வது இன்று
சாவதும் இன்றே என்று
எண்ணி விடு

துன்பங்கள் ஓடும்
இன்பங்கள் கூடும்
உல்லாசம் உன் மார்பைத்
தொட்டுத் தொட்டுத் தாலாட்டும்
கொண்டாட்டம் நாமெல்லாம்
இன்று பூத்த மலர்க்கூட்டம்

நமக்கு ஏது கவலை - ஊதடா
உல்லாசப் பண்பாடும் குழலை
நாமெல்லாம் இன்று பிறந்த மழலை 
நமக்குள் இனி இருக்காதே கவலை!  

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்