Posts

யாழ் களக் கிறுக்கல்கள் - XII

கிறுக்கல் 38: எப்போது அடி விழும் எப்போது கை சுடும் என்று இப்போது நாம் அறியோம்... நடப்பது குருசேஷ்த்திரம் அல்ல.. பொல்லாத குளவிகள் யாரோ எறிந்த கல்லில் நில்லாது பறக்கின்றன! விழுகின்றனவே சில இலைகள் என்று மரம் அழுதால் புதிதாக இலைகள் துளிர்க்காது...! சரித்திரம் மறுபடி திரும்பும் அதுவரை பொறுத்திருந்தால் உண்மை விளங்கும்!   ----------------- கிறுக்கல் 39: துளிரானாய் பின் மலரானாய் என் மனதின் நினைவெல்லாம் நீயே ஆனாய்! கனவானாய் கனவில் வரும் காட்சி நீயானாய்! துணையானாய் துவளும் போதெல்லாம் எனைத் தாங்கும் சுமை கல்லானாய்! அழும் போதெல்லாம் கண்ணீர் துடைக்கும கையானாய் விழும் போதெல்லாம் மார்பில் தாங்கி தாயானாய்! தேவ தேவா ஒரு போதும் பிரிவு வாராத வரம் தாராய்!   ----------------- கிறுக்கல் 40: நிலம் அநாதையாகிப் போய் அழுதது... யார் யாரோ மிதித்துச் செல்கின்ற வலி தாங்கி வேறெதற்கோ நிலம் அழுதது...! ...

யாழ் களக் கிறுக்கல்கள் - XI

கிறுக்கல் 35: யாவும் என்றோ முடியும் ஆகும் அத்தனையும் அழியும் என்ற விதியின் படி யாவும் என்றோ முடியும்! நீயும் நானும் நொடியில் மயான மடியில்! சாவின் மடியில் சண்டியனும் போவான் நொடியில்! தாயின் பாலில் உடம்பில் ஓடும் இரத்தம் நோயில் விழுந்து பாயில் படுத்த பின்னர் ஓடி அடங்கும்! வாழும் நாளில் சூழும் சோகம் வாடி வதங்கிச் சோரும் நெஞ்சம்! ஆழும் கடவுள் அருள் ஒன்று தரவேண்டும் நாளும் பொழுதும் சோகச் சுவடறுத்து சிந்தனைச் சுடர் வளர்த்து தூய அன்பில் உயிரத்தனையும் மூழ்கி தேட வேண்டும் பெரும் வாழ்வு தரும் ஜோதி!   ----------------- கிறுக்கல் 36: மனதில் ஆசையோடு எனக்கொரு ஆணைபோடு மடியில் வந்து விழுந்து மங்கை உன்னை வீணையென மீட்டுவேன்! நாளை என்று இன்னொரு நாள் தேவையில்லை ஆளையாள் அணைத்துக் கொள்ள ஐயர் வந்து நேரம் பார்க்கத் தேவையில்லை! காலை விடியும் பொழுதில் கற்கண்டு நினைப்பில் உன் முகத்தை வெட்கம் மெழுகும் நல்ல சமயமென்றுணர்ந்து என் கை ...

யாழ் களக் கிறுக்கல்கள் - X

Image
கிறுக்கல் 31: தொடர்வதேனோ என்னை? நிமிர்ந்து பார்த்து நிலவைக் கேட்டேன்! தலை கவிழ்ந்து முகம் பார்த்துச் சொன்னது நிலவு... களவு போன என் உள்ளத்தை களவாடிய கள்வன் இவனா என அறியத் தொடர்ந்தேன்!   ----------------- கிறுக்கல் 32: அவனாகட்டும் உன் காதல் வானம் - உன் செவ்விதழாகட்டும் அவன் பருகும் தடாகம்! மொட்டு அவிழட்டும் அவன் கைகள் பட்டு சொட்டுச் சொட்டாய் ஜீவன் உருகட்டும் கட்டு அவனை காதலில் கட்டு விட்டுப் பறக்காது இனி அவன் காமனின் சிட்டு! காட்டு உன்னழகை அவன் முன் காட்டு பார்த்து கண்கள் இமைக்காது பார்த்து எழுதுவான் பல பாட்டு! நிப்பாட்டு மின்சாரத்தை அவன் ஆழட்டும் உன் அழகின் சாரத்தை!!!   ----------------- கிறுக்கல் 33: வெல்லலாம் பெண் மனதை என்று வெளிக்கிட்டால் வில்லெல்லாம் பழுது பார்த்து - எனைக் கொல்லலாம் என்று முடிவுகட்டி கொவ்வையிதழ் வெடிப்புக்களில் எனை வீழ்த்தி புருவ வில் வளைத்து பருவக் கணை தொடுத்து நிராயுதபாணியைக் கொல்கின்றீரம்மா...

யாழ் களக் கிறுக்கல்கள் - IX

கிறுக்கல் 27: முத்தங்களை நான் தருவேன் அர்த்தங்களை நீ புரிவாயோ? வித்தகக் கவியிவன் விண்ணாளாவும் தமிழோடு விளையாடும் வெள்ளை நிலாவே கொள்ளையழகும் சின்னவிதழும் நான் சுவைப்பேன் சிணுங்காமல் சிறைப்பட்டு நீ கிடப்பாயா? பாஷை பல பேசி நேர முட்களை சோம்பலோடு நோக்குவதென்ன? ஆசை புரிய வைக்க அன்பால் சிறை வைக்க மீசை குற்றினாலும் மிடுக்காக நான் தரும் முத்தங்களே பல பாஷை பேசுமடி! பதிலாக நீ ஏதும் பேசாதே... சரியாகக் கணக்கிட்டு முத்தங்கங்களைத் திருப்பித் தருவாயா?   ----------------- கிறுக்கல் 28: நீ எய்கின்ற கவிப் பூக்கள் நன்று நிமிடத்தில் பல கவிதை எனக்குள்ளே தோன்றதடி இன்று! பூ பூக்கின்ற மெல்லிய ஓசை செடி அறிந்திடும் பெண் மனசில் பூக்கின்ற காதலின் பாஷை அவள் கண்ணில் புரிந்திடும்! விழியாலே அழைப்பாள் விரதங்கள் உடைப்பாள் மெளன மொழி பேசுவாள் மயக்கத்தில் ஆழ்த்துவாள் முதல் ஸ்பரிசத்தில் இதயத்தில் சிறகு முளைக்கும் அவள் அருகிருந்தால் எல்லாமே அந்நியமாகும்! காதல் செ...

யாழ் களக் கிறுக்கல்கள் - VIII

கிறுக்கல் 24: வாழ்கின்றேன் என்று தான் சொல்கிறாய் நீயும் உண்மையில் வாழ்தல் என்றால் என்ன? சூரியனுக்குப் பின் எழுந்து பல் துலக்கி தேநீர் தயாரித்து குடித்து முடிய கணினியின் உயிர் பொத்தான் அழுத்தி இணையத்தில் கொஞ்சம் நடந்து திரிந்து நாலைந்து தொ(ல்)லை பேசி நேரம் கரைத்து மதியம் ஏதேனும் சமைத்துப் புசித்து குட்டித் தூக்கத்தில் தேகக் களைப்பகற்றி மீண்டும் கணினி,இணையம் இரவுணவு என்று அதே பழைய பல்லவி பாடி நீயும் சொல்கிறாய் வாழ்கின்றேன் என்று! என்ன இது காலத்தின் கை பிடித்து நடை பழகாமல் என் விதி இதுவென மண்வாரித் தூற்றி சந்தோசம் தொலைக்கின்றாய்! நான் சொன்னது கேட்டாய் சொல்லாத சேதி எல்லாம் உய்த்தறிந்து சொல்லாததும் புரிவாய்! உலக இயக்கம் இம்மியும் நிற்காது விலகி நிற்பதால் விந்தைகள் நடக்காது விம்மி நீ அழுதால் கையொன்று நீளவேண்டும் உனை நோக்கியும்! தொட்டுத் துடைக்க கையொன்று நீளும்மெனின் பொய்கை போல் நீர் கொண்டு கண்கள் அழுவதில் கூட சுகமுண்...

யாழ் களக் கிறுக்கல்கள் - VII

Image
கிறுக்கல் 20: தவிக்கின்றேன் மெத்தை மேல் நான் அத்தை பெத்த அருமை அத்தானே அங்கங்கே தொடுகின்றாய் அங்கங்கள் வலிக்காமல்... இதழில் இளைப்பாற வேண்டுமென்கிறாய் - என் நுதலில் இதழ் ஒத்தடம் தருகின்றாய் மஞ்சமென என் நெஞ்சில் தலைசாய்கின்றாய் கொஞ்சமோ நீ செய்யும் கூத்து...? இன்னும் இன்னும் வேண்டுமென கெஞ்ச வைக்கின்றாய் நொடிக்கொரு முறை சொர்க்கத்தில் தூங்கவைக்கின்றாய் எல்லாம் சொர்பனமாய் தோன்றுதடா கண்விழிக்க நிஜத்தில் எப்போதடா புரிவாய் எல்லாம்?   ----------------- கிறுக்கல் 21: தேடுகின்றாய் நீயும் எனக்குள் உறங்கும் இன்னொருவனை... சூடுகின்ற மலரிலும் சுந்தரத் தமிழிலும் பாடுகின்ற பட்சியின் குரல் விநோதத்திலும் என் வாசம் கலந்திருக்கும்! காது திருப்பி மெய் சிலிர்த்து மனசுக்குள் உள்வாங்கு வடிவாய் விஷ்வரூபமாவேன்! நண்பனாய் நான் சிரிப்பேன் நல்ல உள்ளதோடு உனை அணைப்பேன்! கண்களை மூடி நீ தூங்கு கண்டறியாத உலகம் காறியுமிழும் விடு... விழி மூடி த...

யாழ் களக் கிறுக்கல்கள் - VI

கிறுக்கல் 17: இருட்டுக்குள் இருப்பதாக சொல்பவர்களே ஒரு விளக்கேற்றும் அறிவில்லையா? 'அறிவு' இருட்டுக்குள் இருக்குமெனின் சிந்தனைத் திரிதூண்டியை திருகுங்கள் அடுத்தவரின் அனுதாபத்திற்காக ஏங்கின்றீர்கள் வேண்டாமே... இந்தச் சமூகம் வேதனைப்படும் போதும் வேர்வை வடிக்கும் போதும் வேடிக்கை பார்பதோடு சரி தொட்டு அணைத்து தோளில் சாய்த்து ஆறுதல் தராது அறிவுரைகள் தருவதில் என்ன பயன்? வேண்டாம் வெங்காயமும் இந்த வேடிக்கைச் சமூகமும்!   ----------------- கிறுக்கல் 18:   எப்போது கண்ணே என் தேசம் விடியும்? கடிகார முள் சுற்றுகிறதே தவிர எம் வாழ்க்கை இன்னும் சூனியமாய்... சுழன்றடித்த காற்றில் பறந்து போன சருகுகள் போல ஆளுக்கு ஒரு பக்கம்! இன்று வரும் நாளை வரும் என்று சொன்னாலும் என்று வரும் என்று தெரியாததால் எம் நம்பிக்கையின் நாடித் துடிப்பும் தளர்கிறது கண்ணே... முற்றத்து மண்ணில் பாயின்றிப் படுத்தாலும் பயங்கரமாய் தூக்கம் வருமே.....