Posts

Showing posts from January, 2013

காத்திருப்பு…! (வேறு)

Image
  ஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...! 14 ஆடி 2008

கசக்கி எறிந்த ஓவியம்!

Image
நீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம்! நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் துள்ளி வந்த கடல் அலை காணோம்! கடலை வண்டி தள்ளிப் போகும் வயசான கிழவர் இல்லை... அக்கம் பக்கம் பார்த்துவிட்டு முத்தமிடும் உன் குறும்பில் குங்குமமாய்ச் சிவக்கும் என் நிலா முகம் போனதெங்கே? கடற்கரை கிணற்றில் தண்ணீர் அள்ளிப் போகும் பெண்களின் பார்வை படாது என் முகம் மறைக்கும் உன் உருவம் கரைந்தது எப்படி? அடிக்கடி என் பெயரை உச்சரிக்கும் உதடுகள் கடற்கரை மணலிலும் எழுதிப் பார்த்த அழகு மறைந்தது எப்படி? வசதியாக இப்படிப் பல நினைவுகள் மறைந்து வரைந்த ஓவியம் எதற்கு என்று கசக்கி எறிந்தாயோ என் காதலனே?   09 புரட்டாதி 2008

காத்திருப்பு…!

Image
திரை விலத்தக் குறைவில்லாது காற்று வரும்... காதலும் வந்ததெப்படி காதலனே? பிறை போலிருந்த அம்புலி வளர்ந்து முழு நிலவானது போல்... சிறு கறை போலிருந்த உன் உருவம் ஓங்கி வளர்ந்து என்னுள்ளம் நிறைத்த விந்தையென்ன சொல்...! தினமும் திரை விலத்திச் சிலை போல் காத்திருக்கிறேன்... உனக்காய்... மனச்சாட்சி மறக்கும் மனிதச் சாட்சிகளை விட மகத்தான இயற்கையே இதற்குச் சாட்சி! நான் காத்திருக்கின்ற இரவுகளில் பார்த்துவிட்டுப் போகும் நிலவைக் கேள்... அவ்வப்போது நிலவைக் கொற்றித் தின்பதாய் பறக்கும் பட்சிகளைக் கேள்... அவை சொல்லும் என் காத்திருப்பின் நீண்ட இரவுகள் பற்றி!   ------------------------- 23 புரட்டாதி 2008