வேலை முடிந்து வீடு திரும்புகையில்...

இரவு நேர வேலை முடிந்து பஸ்சில் வரும்போது பல சிந்தனைகள் மனசில்.... கவியுள்ளம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது... முடிவில்லாவிட்டாலும் தொடங்கிய வரிகளை பதிந்து கொள்ளத் தோன்றியது.
/*
காதல்
நிராயுதபாணிகளையே
குறிவைத்து
நடக்கும்
அழகிய யுத்தம்

மலர்க் கணை
எய்தவளே
மடியில் தாங்கி
தருவாள் முத்தம்!

தோற்றவன்
மடியில்
வென்றவள்

இங்கே
தோற்றவர் தான்
வென்றவர்
*/

/*
வீதியில் நடந்து வரும்போது இரவு கொட்டிய Snow இல் புற்கள் எல்லாம் வெள்ளையாக... உடனே நான்,

புற்களுக்கெல்லாம்
நரை விழுந்தது
எப்படி?
*/

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்