காலத்தின் பிறந்த நாள் (2012)!


விழி மூடிய
கனவுகள்
விழி திறக்கும்
நாளை

பனி மூடிய
புல் வெளி
பனி விலகிச்
சிரிக்கும் காலை!

இனி உனக்குச்
சொந்தமில்லை கவலை
தனி வழி திறக்கும்
கவனி…
போகலாம் பவனி
எழுந்து முன்னே வா!

காலத்தின் பிறந்த நாள்
புதுப் புஸ்பங்கள்
பூக்கும் நாள்!

கடந்த நொடி
திரும்பாது
பிறக்கின்ற பொழுதுகள்
உனதாக்கு!

இழந்த சோகம் 
ஆயிரம் இருக்கும்
இரும்பாகு…

காலம் துடைக்கும்
கண்ணீா் என்ற
ஞானம் கூட வேணும்!

எப்போதும் அழுகின்ற
கூட்டமா நாம்?
காட்சியிது மாறும்
காலதேவன் கணக்கது
அப்போது புரியும்!

--------------------------

31 மார்கழி 2011

Comments

கடந்த நொடி
திரும்பாது
பிறக்கின்ற பொழுதுகள்
உனதாக்கு!

மிகவும் அருமை
நன்றி சசி கலா...
அருமயான கவிதை ,
ரசித்தேன்
நன்றி கவி ரூபன்
நன்றி பார்த்திபன்...

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்