காதல் காயம்!

எல்லாம் பொய்யாய்
பழங்கதையாய்
போனபின்....
வீணே திரும்பி வந்து 
இதயத்தில் ஏறி 
விளையாடி 
கண்ணே, மணியே என்று 
கொஞ்சுதலும் 
கூடுமோ? 

காதல் என் 
கை பற்றி 
இழுக்க... 
"சீச்... சீ..."
என
'பட்ட'ஞானம் 
தடுக்க 
பெரும் உணர்ச்சியில் 
தள்ளாடும் 
உள்ளம்! 

நேற்றைய நினைவுகளை
அசை போட்டபடி 
மனசு... 
'சுளீர்' எனும் சவுக்கடி 
தானே அதற்குப்
பரிசு...!

போரிலே 
காயம் சுமந்து 
திரும்பிய 
காளைக்கு 
மாலை...! 

காதலில் 
இதயத்தில் 
புண் சுமந்த எனக்கு 
வாழ்க்கையிது 
மாயை ...

ஒன்று மட்டும் 
புரிகிறது 
நேசிக்கத் தெரிந்தவர்களிடம்....
உள்ளம் புரிந்தவர்களிடம்...
பெண்ணை மதிப்பவர்களிடம்...
காதல் 
கடுமையாகத் தான் 
நடந்து கொள்கின்றது!



---------------------
சித்திரை 2009

Comments

நேசிக்கத் தெரிந்தவர்களிடம்....
உள்ளம் புரிந்தவர்களிடம்...
பெண்ணை மதிப்பவர்களிடம்...
காதல்
கடுமையாகத் தான்
நடந்து கொள்கின்றது!

உண்மைதான்....
rajamelaiyur said…
/ஒன்று மட்டும்
புரிகிறது
நேசிக்கத் தெரிந்தவர்களிடம்....
உள்ளம் புரிந்தவர்களிடம்...
பெண்ணை மதிப்பவர்களிடம்...
காதல்
கடுமையாகத் தான்
நடந்து கொள்கின்றது!
//

100 %உண்மை நண்பா
தினேஷ்குமார் மற்றும் ராஜா உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றிகள்...

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்