மழை


மழை
அடிக்கடி
அழைக்காமலே
எனக்குள் விஸ்வரூபம்
எடுக்கும்
உன்னைப் போல
தூறலாகிக்
கனக்கின்றது!

குளிர்காற்று
காதுமடல் தடவி
தலைகோதும்
போதெல்லாம்
உன் உதடும்
கைகளும்
நினைவில்...

பாதங்கள்
வெள்ளம்
அழைகையில்
உன் கால்
கொலுசின்
ஒலி!

மழைத்துளி
மண்ணில்
மோதிச் சிதறித்
தெறிக்கையில்
மரணத்தின்
வலி!

மழை
எல்லோருக்கும்
பொதுவாய்
கடவுள்
எடுக்கும்
பால பாடம்!

புரிந்தவர்கள்
ஞானம்
பெறுகிறார்கள்!

---------------------
சித்திரை 2009

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்