சூரியனுக்கு ஏது சாவு?




உடைந்த குரலில்
குயில் ஒன்று கூவியது
வண்ணம் இழந்து
மயில் ஒன்று ஆடியது
குனிந்த தலையாய்
நெல் வயல் ஒன்று வாடியது
அநாதையாகிப் போய்
ஈழ மண் அழுதது!

ஈழம் காண
எழுந்து புறப்பட்ட தோழா்களே
துரோகம் விரித்த வலையில்
துடித்து விழுந்தீா்களோ?

விழி மூடிய
வீரா்களே
சாவை வேண்டி
அணைத்த மறவா்களே
பூவைத் தூவி
நிற்கின்றோம்!
உங்கள் கல்லறைகள்
வீரத்தின் கல்வெட்டுக்கள்!

துவக்கு ஏந்திய
துடிப்பு மிக்கவா்களே
மேற்கில் சூரியன்
மறைந்தால்
நாளை விடியாதோ?

சூரியனுக்கு ஏது
சாவு?
வீரனுக்கு
என்றும் வாழ்வு!

---------------------
குரல் சுபா
கார்த்திகை 27/2011

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்