கோலம் தரும் பாடம்!

கோலம் அம்மா
போட்டது - ஒரு
புள்ளியில் தொடங்கி
பல புள்ளிகள் சேர்த்து
அழகாக உருவானது!

வாழ்க்கையின் வடிவான
தத்துவம் கோலத்திற்குள்
தன் கோலம் மறைத்து
நிற்பது புரியாது
எத்தனை முறை
கடந்து போயிருப்போம்
கோலத்தை!

ஒரு புள்ளியில் கோலம்
ஒரு துளியில் மனிதன்!
கோலத்தை கூட்டி
அள்ளினால் ஒரு
பிடி...

உடலை எரியூட்டி
அள்ளினால்
ஒரு பிடி சாம்பல்!

அதிகாலையில்
மீண்டும் நேற்றுப்
போட்ட இடத்தில்
மறுபடிபடியும்
புதுக் கோலம்!

ம்...
வாழ்க்கை
இப்படித் தான்!

எம் கோலத்தை
நாமே போட முடிகின்ற
சலுகை மட்டும்
நம் கையில்!

-------------------

சித்திரை 2009

Comments

ஷைலஜா said…
கவிதைக்கோலம் அழகு..
நன்றி ஷைலஜா...

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்