நடந்த கதை!–ஒலி வடிவுடன்…

பிழை நடக்குது என
உணா்ந்தவன் துவக்கை எடுத்தான்
களை பிடுங்க – அவன்
எதிரிகள் தலையை எடுத்தான்
சிலை போல் சிலா் நின்றது கண்டு
விழி சிவந்து நின்றான்
மலை மேல் விழினும்
தலையால் மோதி
உடைப்பாய் என்றான்!

நிலை உயா்ந்து நின்ற சிலா்
மண்ணை விலை
பேசுதல் கண்டு
கையிலைச் சிவன் போல்
உக்கிரம் கொண்டான்!

மண்ணை மீற்க
மறவா் படை அமைத்தான்
கழுத்தில் நஞ்சு கட்டி
யமனின் வேலை குறைத்தான்!

களம் பல ஆடி
பகையோடு மோதி
நகை பல செய்து
நின்றான்!

திகைத்து நின்றான்
பகைவன்
திசை பல ஆள் அனுப்பி
சூழ்ந்து நின்று சூழ்ச்சி
செய்தான்!

எதிர்த்து நின்றான்
தம்பிகளோடு அண்ணன்

இறுதியில் வென்றது
துரோகம்!

வீரம் சுமந்து
நெஞ்சில் ஈழம் சுமந்து
நின்ற மாவீரா்களை
இறுதியில் மண்ணே
சுமந்தது!
தன்னோடு அணைத்து
அழுதது
பகையின் பூட்ஸ்
காலின் அடியில்
புண்பட்டுத் துடித்தது…

நகை செய்து
நின்றான் பகைவன்!

பூவை இழந்து
மானம் இழந்து
அங்கம் இழந்து
“அடுத்தது என்ன?” எனும்
நினைவை இழந்து
சொந்த மண்ணில்
அகதியாய் நின்றான் தமிழன்!

ஓரமாய் இருந்து
ஓங்கி அழுதது தமிழ்
ஆதாரமாய் இருந்து மண்ணில்
அனாதையாகிப் போய்
அழுதது தமிழ்!

“அடுத்தது என்ன?”
துடித்து விழுந்தன
கேள்விகள் பல!

நாடு மாறி நாடு
கதைக்குது
நல்லதாய் என்ன தான்
நடக்குது இங்கே?

கிழக்கு விடியும்
எனக் கிடக்கிறான்
தமிழன்!

வழக்குப் பல போட்டும்
வழிக்கு வரமாட்டினம் போல…

அண்ணன் செய்தது போல
ஏறி உழக்கணும் மீண்டும்
கண்ணன் போல் தூது
நடந்து பயனில்லை!

புரட்சி வெடிக்கணும்
பகைவனுக்கு மிரட்சி
கொடுக்கணும்!

தானாய் எதுவும் நடக்காது
குஞ்சுகள் நாம் சோ்ந்து
நின்றால் வானில்
பருந்துகள் இனிப் பறக்காது!

(ஒலி வடிவம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.)

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்