கசங்கிய காகிதங்களோடு…! - VII

திருவிழா
இது
தோ்தல்
திருவழா!

சாமிகளுக்குப் பதில்
ஆசாமிகள் ஆங்காங்கே
தோன்றி
தரிசனம் தந்தனா்

வாக்குக்
கேட்டு
வாக்கிங்
வந்தனா்!

**************************

சேவல்
பாடியது
திருப்பள்ளியெழுச்சி!
சூரியன்
சோம்பல்
முறித்தான்
மேகப் போர்வையை
விலத்தி!

பூவிதழ்
வருடி
தென்றல்
புன்னகை
செய்தது!

சில
இலைகள்
முகம்
வோ்த்து
முணுமுணுத்தன!

தலை
துவட்ட
துணி
கேட்டு
கை
அசைத்தன!

**************************

நீல வானம்
நிறையச்
சன்னம்!
துவக்கு
கக்கிய
இரத்தம்!

காளமேகம்
காணவேண்டும்
"இம்" என்றால்
எழு நூறும்
"அம்" என்றால்
ஆயிரமும்
தாண்டி,
"டும்" என்றால்
இன்னும் பல
நூறு பாடலாம்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்