கசங்கிய காகிதங்களோடு…! - VI

நாளை நாளை என்று மனிதன்
சொல்வதுண்டு
பாவம் பாவம் என்று கடவுள்
நினைப்பதுண்டு

வருகின்ற காலங்கள்
தருகின்ற இன்னல்கள்
அறிந்துள்ள மனிதா்கள்
இருந்தால் சொல்லுங்கள்!

**************************

கண்ணே…
உன் வாயுதிர்
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என்
ஆராய்ச்சிப் பொருள்!

காதலின் முன்
ஒரு பொருள் தந்த
அதே வார்த்தை 
கலியாணத்தின் பின்
வேறொரு அா்த்தத்தோடு…

மனசை உணா்வை
அன்பை மொழிபெயா்க்கும்
முயற்சி வார்த்தைகள்!

ஒன்று தெரிந்து கொள்
உச்சரிக்கப்படுகின்ற
உதடுகளைப் பொறுத்தே
வார்த்தைகள்
அா்த்தப்படும்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்