Posts

Showing posts from May, 2010

யாழ் களக் கிறுக்கல்கள் - XIV

கிறுக்கல் 43: என்ன நடந்தது என்றெனக்குத் தெரியாது முன்னம் போல் முறுவல் இல்லை முகத்தில்! கன்னம் சிவந்து காத தூரம் ஓடி மறையும் காதல் இல்லை நெஞ்சில்! இன்னும் இளகிய உன் சிந்தை காணவில்லை முன்னும் பின்னும் அற்புதங்கள் காட்டும் அழகவை போனதெங்கே பிள்ளை? விளங்காத கவி சொல்லும் விரிகின்ற கண்களின் ஒளி மறைந்ததும் என்ன? பல நூறு துச்சாதனர்கள் கூடி மான பங்கம் செய்தது போல அழகிழந்ததும் என்ன? "ஈழம்" எனும் பேர் தாங்கி நின்ற பெண்ணே எப்போது துடைப்போம் உன் துயர்?   கிறுக்கல் 44: வலிகள் மனதில் கவலை எழுதும் வரிகள்! மொழிகள் பலவிருந்தும் என்ன பயன்? உன்கண்ணடி பட்டு கண்ணாடி போல் உடைந்த உள்ளத்தின் வலி சொல்ல எந்த வார்த்தையும் அகப்படவில்லை! என்னடி எனக்குள் செய்தாய்? ஓரடிக் கவிதையில் ஔிந்திருக்கும் அத்தனை அதிசயமும் உன் ஓரங்குலப் புன்னகையில்! ஈரடி இடைவெளி இன்னும் எமக்குள் ஏன்? தேனடி

யாழ் களக் கிறுக்கல்கள் - XIII

கிறுக்கல் 41: இறைவா மறைவா(ய்) இருக்கும் தலைவா ஒளியோ இருளோ உன் நிறம் எதுவோ தெரியேன் பழியோ பாவமோ நீ போட்ட பாதையில் எவை எவை வருமோ அறியேன் நடக்கின்றேன் தனியே தந்தை விரல் பற்றி நடக்கும் சிறுவன் போல் உன் விரல் தேடி அலைகின்றேன் பற்றுவேன் ஒருநாள் பற்றிய பற்றுக்கள் பட படவென அறவே!   கிறுக்கல் 42: கூட வரும் கூட்டம் கூடை நிறைப் பூக்கள் கொண்டு வரும்! கூடு விட்டுப் போன பின்னால் 'பிணம்' எனும் பெயரும் வரும்! ஏடு எடுத்துப் படித்தும் என்ன ஓடி ஓடி உழைத்தும் என்ன மாடி வீட்டு மைனரானாலும் என்ன கூடு கழட்டி உயிரார் பறந்த பின் சூடு வாங்கி எரிந்து போகும் தேகம் - ஒரு பிடிச் சாம்பலாகிப் போகும் பாவம்! நிலையாமை தெரிந்தும் ஏனிந்த அறியாமை நான் இன்று போனால் நீ நாளை வருவாய்! நீயும் நானும் பூமியின் விருந்தினர் அனுமதி நீட்டிப்பு என்ற கதையே இங்கில்லை..! அனுமதி இருக்கும் வரை அனுபவி 'சக மனிதன்' என்கின்ற அறிவு கடந