Posts

Showing posts from June, 2009

கடவுள் எழுதிய கவிதை!

கடவுள் எழுதிக் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று அடியேனின் முற்றத்தில் வந்து விழுந்தது. விரித்துப் படித்த போது… ;-)   வானம் என் அகண்ட மேனி! நட்சத்திரங்கள் என் கனவுகளின் கண்சிமிட்டல்கள் நிலவு யார் கண்ணும் படாமல் இருக்க நான் வைத்த திருஷ்டிப் பொட்டு! காற்று மரங்களின் நடனம் இலைகளின் கை தட்டல் அலைகளின் ஆட்டம் அத்தனையும் காண  அடியேன் அனுப்பிய இரகசியத் தூதன்! மழை என் கண்களின் கருணை! சூரியன் நான் கையிலேந்தும் தீபம்! மனிதன் மறந்துபோய் நான் செய்த பிழை!