அதிகார நாடுகளே அசையுங்கள்…

லண்டன் நகரில் நடந்த கவன ஈர்ப்பு போராட்டம்

திக்கெட்டும் அதிருது
‘எங்கள் கோஷம்’ எவர்
காதில் விழுகுது?

எல்லைகள் கடந்தும்
எம் உறவுகளின்
கண்ணீர் சுடுகுது
எழுந்து சென்று
துடைக்காமல் தமிழனென்று
நாம் என்ன வாழ்வது?

ஜ.நா வும் அழைத்தது
அமெரிக்கா நீதி உரைத்தது
இந்தியா நீலிக் கண்ணீர் வடித்தது
இங்கிலாந்தும் இளகி வந்தது
எந்த 'லாண்ட' என்ன செய்தாலும்
எனக்கென்னவென்று
சிங்களம் தமிழர்களைக்
கொன்று குவிக்குது!

தூர தேசங்களில் வாழ்ந்தாலும்
ஈழ தேசத்தின் கனவு
எமக்குள்ளே எழுந்து விரியுது

ஈர நெஞ்சங்கள்
ஓரப் பார்வை பார்த்தால்
போதும்...
எம் மண்ணை
ஆரத் தழுவும்
கனவு நனவாகும்!

நேரங் கடந்த பின்
ஞானம் வந்து பயனில்லை

அதிகார நாடுகளே
கொஞ்சம் அசையுங்கள்
நோகாமல் அடிப்பதெல்லாம்
நோவுக்கு மருந்தில்லை
பாராமல் இருக்கின்ற
கொள்கை தளர்த்துங்கள்
தமிழன் உயிருக்கு எதுவும்
நேராமல் காக்கின்ற
பொறுப்பு உமக்கும் உண்டு!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்