பட்சி சொன்ன க(வி)தை!

எங்கிருந்தோ ஒரு
பட்சி வந்து சொன்னது
மங்குவது போலிருக்கும்
யாவும் மங்குவது கிடையாதென்று!

எத்திசையும் எக்காளச்
சிரிப்பு...
சுற்றி வரப் பகைவனின்
இருப்பு...
வீழ்ந்துவிட்டோம் என்று
இவர் நினைப்பு
விழ விழ எழுந்த கதை
பல இருக்கு!
அப்போது தெளியும்
மகிந்தனின் கிறுக்கு!

கால காலமாய்
நாமிருந்த மண்
வேழம் போல் பொருதும்
வீரம் நிறைந்த மண்
நாணல் போல் விழுவதும்
நேரம் பார்த்து எழுவதும்
கூனல் வீரம் கொண்ட
பகைவனுக்குப் புரியாது!
புரியும் போது அவனுடலில்
உயிர் தரியாது!

அப்பாவிகள் பலர்
இப்ப ஆவிகள்!
புலி வேட்டையென்ற பெயரில்
ஹெலியில் கூட வந்து
குண்டு போடுகின்றீர்
ஹெகலிய ரம்புக்வல்லவிற்கு
தீனி போடுகின்றீர்!

அடியும் உதையும்
அண்ணன் தந்தால் புரியும்
விடியும் போதே
காட்சி மாறலாம்
விந்தை எதுவுமில்லை
முந்தை நடந்ததெல்லாம்
சிந்தை நினைத்துப் பார்த்தால்
ஆந்தை கூட அலறும்
உம் ஆட்டம் கொஞ்சம்
அடங்கும்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்