புள்ளிகள் இடுவோம்...

காலம் இது காட்டும்
புள்ளியில் நின்று கொண்டு
ஒவ்வொருவராய் முடிந்தளவு
புள்ளிகள் இடுவோம்...

எங்கிருந்தாலும் மறவாது
நீயும் ஒரு புள்ளியிடு
புள்ளிகளுக்கு இடையில்
தூரம் முக்கியமில்லை
புள்ளிகளை இணைப்பது
இப்போதெல்லாம் சுலபம்!

தள்ளி நின்று புள்ளிகளை
வேடிக்கை பார்க்கும்
கரும் புள்ளி நீ
எனில், இப்போதே
போய்விடு!

ஆனால்,
ஒன்றை மறவாதே
காலம் கட்டாயம்
உன் முகத்தில்
செம் புள்ளி குத்தும்!

பெரும் புள்ளி
சிறு புள்ளி எனும்
பேச்சே இங்கில்லை...

சிறு துளியில்
வந்தவன் தான் நீ
ஆகவே சிறு புள்ளிதான்
உன்னால் முடியும் என்று
சிணுங்காதே...!

நீ இங்கிடுகின்ற புள்ளிகள் தான்
அண்ணனுக்குத் தெம்பு
பிறகென்ன கிடைக்காதோ
ஈழம் நீ நம்பு!

ஒவ்வொரு தமிழனும்
பகைவனுக்கு அம்பு!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்