தலைவா வாழீ நீ!

தமிழீழ தலைவர்

இரவாய் இருந்த
எம் வாழ்க்கை
பகலாய் விடிய
வந்துதித்த தலைவா
வாழீ நீ!

முதலாய் வந்த
குடியின் முதுகெலும்பு
ஒடிக்கப்பட்ட போது
உனக்கு மீசை கூட
முளைக்கவில்லை!

ஆசை அரும்புகின்ற
அந்த வயதில்
ஆயுதப் பாஷையன்றி
வேறெதுவும் இவர்க்குப்
புரியாதென உணர்ந்தவன்
நீ!

துவக்கை கைகளில்
எடுத்தவன் நீ!

தமிழின விடுதலைக்குப்
புது துவக்கம்
கொடுத்தவன் நீ!

உலகில்
தமிழின இருப்பை
எதிரொலிக்கச்
செய்தவன் நீ

காந்திய வழியில்
நடந்து சோர்ந்தவர்களுக்கு
நீ பிறந்தது
பெரும் தெம்பு!

ஏந்திய துவக்கின்
வாய் திறந்து பேசிய
வார்த்தையால் தான்
பேச்சு வார்த்தை கூட
நடந்தது!

உன் வேர்கள்
ஆழமானது
நீ பரப்பிய
கிளைகள்
பிரசித்தமானது

கொரில்லாவாகி
மரபுசார் இராணுவமாகி
அலை மீதேறி
கடற் புலியாகி
'வானுமாகிப் பரந்த'
பரம்பொருள் போல்
வான் புலியாகி
நீ பரப்பிய கிளைகள்
பிரசித்தமானது!

தலைவா,
நீண்ட ஆயுள் கொண்டு
எமைத்
தீண்ட வரும்
பகை அறுப்பாய்
பகலவன் போல்
தமிழீழ ஒளி
கொடுப்பாய்!

------------------

24-11-2008

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்