கண்ணா...

இருளுக்குள் தவித்துக்
கொண்டும்
பொல்லாத நினைவில்
என்னைத் தொலைத்துக்
கொண்டும்
எத்தனை காலம்
இருப்பேனடா கண்ணா?

உலகுக்குள்
உண்மையில்லை
மயங்கி மயங்கி
அலைபாய்கின்ற மனசினால்
நிம்மதியொன்றில்லை
சிலைகளுக்குப் பின்னால்
கடவுளைத் தேடியும்
சேலைகளுக்குப் பின்னால்
பெண்மையைத் தேடியும்
புரிந்து கொண்டது
எதுவுமில்லை!

நான், அவள்
சல்லாபிகின்ற எல்லாம்
ஐம்பூதச் சேர்கையின்றி
வேறெதுவுமில்லையெனும்
ஞானம் கூடவில்லை

வீணாகக் கரைகின்றது
காலம்
கோலங்கள் பல வரையும்
ஆசை மீன்கள் மனசுக்குள்
ஓடித் திரிந்தாலும்
சோம்பித் திரிகிறேன்...
சோகமடா எல்லாம்!

கண்ணா...
அண்ணாந்து பார்த்து
அரோகரா எனக்
கோஷம் போடும்
சராசரி மானிடனாக
என்னையும் ஆக்காதே

விண்ணெல்லாம்
தொட்டு
விண்மீன் அளைந்து
விளையாடும்
நீல மேனி வண்ணா
வாய் திறந்து
நான் சொன்னால் தான்
என் மனம் புரிவாயோ?

காலமெலாம்
உனை மனதில் ஏந்தி
உற்ற தோழானாக்கி
உறவு கொண்டேனே
மீதமெல்லாம் நான்
சொல்லவும் வேண்டுமோ?
மங்களங்கள் தருவாய்
என் ஈழ மண்ணின்
விடுதலை தருவாய்
நினைக்கும் போதெல்லாம்
கட்டற்ற கவி செய்யும்
புலமை தருவாய்!!!

Comments

பாவமடா கண்ணன் விட்டு விடு
அவர் வீட்டு பிரச்சையே பெரும்
பிரசனையென்று நீதானே சென்னாய்
அன்று

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை