ஈழப் பரிசு!

புரியும் சமாதானங்கள்
என்று
ஒதுங்கி நின்றோம்!
எரியும் நெருப்பில்
எண்ணை வார்ப்பதன்றி
எதுவும் புரியவில்லை
அந்த மடையருக்கு!


அரியும் புலியும்
மோதினால்
ஓட்டமிடும் அரியும்
தெரியும் நீல வானம்
அண்ணாந்து பார்
விரியும் வானவில்லில்
தெரியும் புலியின்
வரியும்!


சிரியும் ஐயா
சிரிசேன ஐயாக்களால்
சரிசமன் எமக்கு
என்றும் வராது


போலியாய் நெற்றியில்
பட்டையிடும் பக்தன் போல்
காவிப் பல் தெரிய
இவர்கள்
சமாதான வேதம்
ஓதுவது ஒன்றும்
புதிதி்ல்லை!


வேலியாய்
நாம் தான்
இருக்கவேணும் ஐயா!


ஆழிக் கடலலை
மேவி
விரியும் வானத்தில்
நீந்தி
வரிசையாய் புலிப்படை
நடத்தும்
அண்ணன் வீரத்தால்
பரிசாய் கிடைக்கும்
எமக்கு ஈழம்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்