வெங்காயம்...

வெங்காயம் இதுவென
வெறுத்து ஒதுக்க முடியாது
உரிக்க உரிக்க
தன் காயம் பொறுத்து
தனக்காய் உனை அழவைத்து
சமையலுக்கு சுவை
சேர்ப்பதால்
வெங்காயம் இதுவென
வெறுத்து ஒதுக்கமுடியாது!


உன் காயம்
வெறும் உயிர் தாங்கும்
கூடு
பெருங்'காயம்' பட்டுவிட்டால்
தாங்காது வாடும்!


யமதூதன் உன் உயிர்
பறித்தபின்
உன் காயம்
சதத்திற்கும் உதவாது
மயான பூமியில்
தானே போய் எரியாது!


நாலு பேர் கத்தியழ
நாலு பேர் சுமந்தோட
நாலு பேர் நினைவில்
என்றும் இருக்க - நீ
செய்ய வேண்டிய
செயல் நாலல்ல பல!


ஆகவே,
கறிக்குதவும் வெங்காயம்
போல் உன் காயம்
யாருக்கும் உதவாது
மரித்துப் போனால்
உன் பரம்பரை
சுமக்கும் பெரும் பாவம்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்