சொல்வாய் தேவி...

சிவ சக்தியே
சிவனவன் பாதியே
கடைக் கண்
திறந்தே பாராய்
காதலாகிக் கசிந்துருகும்
பெண்டிர்
கடைசியில்
கரன்சியில் கொழுத்திருப்பவன்
பக்கம் சாயும்
மாயம் என்ன கூறாய்?

அங்கையில் தாங்கி
நின்றாலும்
அன்பினை பண்பினை
வேண்டாது
அளவில் செல்வமும்
அலுங்காமல் குலுங்காமல்
போய்வர
பறக்கும் காரும்
பள பளக்கும்
பங்களாவும்
கேட்பதென்ன
கேலிகள் செய்வதென்ன?

மங்கை மனம்
மங்கைக்கு புரியுமாம்
மடையர்கள்!
சிவன் சங்கை
நெரித்து
விடம் அங்கே
தங்கச் செய்தவளே...
தகவல் சொல்வாய்
புரியவில்லையம்மா
மங்கையர் குணம்
மண்ணில்...!

கண்ணில் நீர்
வர அழுதே
காரியம் செய்வார்
உனக்கேதும்
தெரியுமோ?
என் சித்தம்
தெளியச் சொல்வாய்
தேவி!

-----------------------

28-05-2007

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்