என் தேசம்

குருதி ஓடையும்
பிண வாடையும்
என் தேசத்து
தெருக்களில்...

உயிர் சுமந்து
இருப்பதில் சில
சுமந்து
இடையில் குழந்தை
சுமந்து
நடையில் என் தேசத்து
எல்லை கடக்கின்றனர்
மக்கள்!

என் மண்ணின்
உயிர்
ஆயிரமாயிரம்
'பூட்ஸ்' கால்களின்
காலடியில் நசுங்குண்டு
சுதந்திர தாகத்தோடு
காத்திருக்கிறது!

பலிகள் பல கொடுத்து
நரிகளின் ஊளை கேட்டு
பரிகளாகி மேனி விடைத்து
அரிகளின் தேகத்தை
'ரவை' களால் கிழித்து
கரிகாலன் கண்ணசைவில்
பாய்கின்றனர் புலிகள்!

இருந்தும்
அரசு கட்டில்
அமர்ந்திருக்கும்
ஆந்தைகள் அலறும்
ஒலி கேட்டு
காது பொத்தி
'அடைத்த செவியினர்'
ஆக வெளிநாடுகள்!

படை மட்டும்
நடாத்தி
கிடைப்பதல்ல வெற்றி!
சடை நிறைய
ஈரோடு பேன்
ஓடும்
அரசியல் அரங்கமேறி
உரை செய்தெம்
ஞாயம் சரியென
செவிகள் தோறும் சொல்லி
மரை கழண்ட
எம் நாட்டு
அரசியல் வாதிகளின்
செவிகள் திருகி
ஞானம் தருவதே
வெற்றி!

நான் ஒரு
கோழையாய்
சில சேதிகள்
சொன்னேன்!

ஆனாலும்
மறுபடியும்
மனசுக்குள் கனவொன்று
விரியும்...

அது
என் கடவுச் சீட்டில்
என் நாடு
'தமிழீழம்'
என்றிருப்பது!

 

--------------------

புரட்டாதி 2007

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்