2008 இல்...

    

காலக் கலண்டரில்
ஒருநாள் கிழிக்கப்பட
ஓராண்டு
ஓடிப் போனது!

வெளிநாட்டிலிருந்து
வரும் அப்பாவை
எதிர்பார்க்கும்
குழந்தை போல
நானும்
புதுவருட
எதிர்பார்புடன்...

வழக்கப் போல
"இந்த வருஷத்திலாவது
செய்யவேண்டியவை"
என ஒரு பட்டியல்
ரெடி...

கண்மடலில்
காதல் எழுதி
வருவாள் ஒரு வஞ்சி...

நேர்த்திக்கடன்
செய்தவைபோல
மொட்டத்தலையோடு
முணுமுணுக்கும்
என்னூர் மரங்கள்
துளிர்க்கும்...

இரத்தத்தில் உடல்
நனைந்து...
வெட்க்கத்தில்
முகம் மறைத்து...
ஏக்கத்தில் வாடும்
வெண்புறா...
சிறகு கழுவி
உலர்த்தும்...

புண்பட்ட
ஈழ மண்ணின்
காயங்கள் ஆறும்!

"Gun" இல்
பூக்காது
சமாதானம்
"கண்"கள்
திறக்கட்டும்
இனியாதல்...

உதட்டில் ரெடிமேட்
புன்னகை
வழக்கமான ஹலோ...
என்ன இது
நாமும் இயந்திரமாய்
ஆகிப் போனோமா?

வாருங்கள்
தோழர்களே...
போலிகளை
களைவோம்...

சபதம் செய்வோம்
சத்துள்ள
உலகம் செய்ய...!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்