காதல் பிரிவு - சில கீற்றுக்கள்

கடற்கரையில்
நாம் நடந்த
சுவடுகளை
கடலலை அழிக்கும்!

கண்ணே நீ
என் இதயத்தில்
நடந்த சுவடுகளை
யாரழிப்பார்?

***********

மனசுக்குள்
மத்தாப்புக்
கொளுத்தியவள்...

மனசையே
கொளுத்துவாள் என்று
யார் அறிவார்?

***********

வீணை அங்கே
விரல்கள் இங்கே
இராகத்தை மட்டும்
ஏனடி
திருடிக் கொண்டாய்?

***********

என் இதயச்
சுவற்றில்
உன்
ஞாபகச் சிலுவைகள்!

எப்போதடி
உயிர்த்தெழும்?

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை