பகையோடும் வேளை!

ஓயுதல் தீருமடா
புதியதோர் ஒளி
பிறக்குமடா!

பாயுதல் இன்றிப்
பதுங்கியிருந்த புலி
பாய்ந்தே சீறுமடா!
சீயத்தின் பிடறி
கிழித்து விளையாடி
காயங்கள் ஆற்றுமடா!

சிங்கத்தை கொடியில்
தாங்கியதால்
வீரம் வருமோடா?
அடே மோடா...
பாடங்கள் இன்னும் பல
இருக்கு படிக்க!

கூட்டங்கள் பல கூடி
கூவிப் பிதற்றி
நின்றோரெல்லாம்
ஓட்டங்கள் விடுவர்
ஆட்டங்களின்றி
தலைவன் போடும்
திட்டங்கள் கண்டு
திசையெங்கும் வியந்தே
நிற்குமடா!
பயந்தே நடுங்கிப்
பகை யோடுமடா
விரைந்தே எமக்கொரு
தனி ஈழம் உருவாகுமடா!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்