சிறை

சிறை
விரும்பியோ
விரும்பாமலோ
எம்மவர்க்கு
பரிச்சியமான
ஒன்று...


சுதந்திரத்திற்காக
சிறை செல்பவர்கள்
அல்ல
பலரும்


சும்மா
இருந்து
சுருட்டுப் பிடித்த
அப்பு பாவம்...


சிறு சில்லு
சுற்றி விளையாடிய
சிறுவனும்
அங்கே...


காரணம்
புலிகளுக்கு
வாகன ஓட்டியாம்...


தனியாய்
இருக்க
பயமென்று
அவனும்
பிடித்தானோ?

என்ன தான்
என்றாலும்
எம்மைப்
பொறுத்தவரை
சிறை சென்று
வருவது
ஒரு கெளரவம்!

வெளிநாட்டில்
தஞ்சம் கோரவும்
வசதி...
ஆனாலும்
மனசுக்குள்
தத்துவார்த்த
விசாரணை ஒன்று...


கிறில் வைத்த
கம்பியால்
ஏன்
சிறைக் கதவுகள்?

அப்பாவிகள்
உள்ளிருந்து
பொலிஸ் காரர்
தான் சிறையில்
என்று
ஆறுதல் கொள்ளவா?

ஆட்சியாளர்கள்
கவனிக்க

பூட்டிய சிறைக்குள்
பிறந்த குழந்தையால்
தான்
கம்ச வதம்!

புரியுமோ
உமக்கு?

புரிந்துவிட்டால்
தனி ஈழம்
எமக்கு!!!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்