இறந்தது போதும்!

காதலி
வார்த்தைகளுக்கு
வாள் வீசக்
கற்றுக் கொடுத்தாய்!


என்
இதயச் சுவரில்
எத்தனை
கீறல்கள்...


கீறல்கள்
மேல்
இதழ் தேடல்கள்
நடத்து...
என்
வாலிப வானம்
விடியட்டும்!


குரலில்
எதைக்
குழைத்தாய்...?
என் இதய
நாளங்களில்
குளுக்கோஸ்
ஏறுகிறதே...!


விழிகளில்
சொருகிய
வேல்களைக் கழற்று
எத்தனை தடவை
நான்
இறப்பது?

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை