என் தேவி

விரிகின்ற எந்தன் நினைவதிலே
திரிகின்ற ஒர் உரு உன்னையன்றி வேறெது
குவிகின்ற உந்தன் இதழ்தனை
இமைக்காமல் நோக்குங்கால்
அவிகின்றதம்மா எந்தன் மனது!

நடக்கின்ற நிலாவோ நீ?
அட.... ட... ட...
சுவைக்கின்ற பலாவோ நீ?
தவிக்கின்ற மனமெங்கும் நீ
தவிக்க விடலாமோ என்னை இனி?

பிறக்கின்ற கவிக்குள்ளே உள்ள கரு நீ
துடிக்கின்ற இதயத் துடிப்பினிலுள்ள சுதி நீ
கடக்கின்ற ஒவ்வெரு நாழியும்
நான் நினைக்கின்ற பாவையம்மா நீ
மொத்தத்தில் மன்மதன் மனதில்
நின்று விளையாடும்
ரதிக்கு ஒப்பான மதி நீ!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை