ஈழக் கனவு

கொடும் தீ வந்தெம்மைத்

தீண்டும்

சுடும் போதெல்லாம் உண்மை

தூங்கும்

வெறும் வார்த்தை ஜாலத்தில்

அறிக்கை பறக்கும்!

உலகும் இவர் பேடித்தனம்

கண்டு மெல்லச் சிரிக்கும்!

 

அழும் குழந்தையின்

கண்ணீர் கண்டும்

விழும் தலைகளின்

வணங்காமை கண்டும்

வெ(ல்)லும் எம் பகை

என்றெம் வீரர்

குரல் கேட்டும்

உதடு சுளிப்பார்

உண்மை மறப்பார்

 

கடும் கோபம் கிளறிவிட்டார்

எம் குலப் பெண்மை பறிக்க வந்தார்

போலிச் சமரசம் செய்து நின்றார்

பொல்லாத போர்தன்னை

வேர் ஊண்டித் தளைக்கச்

செய்தார்

 

சாயம் மாறும் ஒரு நாள்

ஞானம் வரும் பின்னாள்(ல்)

ஈழம் வரும் பொன்னாள்

காயம் மாறும் அந்நாள்

எம் கனவு பலிக்கும் திருநாள்

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை