கனவுப் பெண்

உள்ளம் பயந்து ஊமையாகுது

கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது

 

கொடி முல்லையென ஆடி வருவாள்

குயிலின் நாதமெனக் கூவி வருவாள்

 

செம்பருத்தி அவளென்னை

ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள்

பின்னே ஓடி வந்து என்னைக்

கட்டி அணைப்பாள்

 

நீள் முடி கோதி

நிம்மதி நாடி

புன்னகை செய்வாள்

பின்னே பெருநகை செய்து

என்னை ஏளனம் செய்வாள்

 

முகத்திரண்டு கருவண்டு

என்னை கிறங்கடிக்க வைக்கும்

மூக்குத்தி மின்னொளியை

மழுங்கடிக்கச் செய்யும்

 

பேனாவை எடுத்து

சிந்தனைக் குதிரையை

தட்டிக் கொடுத்து

புதுக் கவிதை ஒன்று

எழுத்தில் வடிப்பேன்

பூவை அணைத்து

உயிர்க் கவிதை ஒன்று

மண்ணில் படைப்பேன்.

________________________________

* செருமுனை - போர்க்களம்

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்