இறைவனுக்கு எச்சரிக்கை

சமாதான தேவதை - நீ

சமர் கண்டு சோர்வதா?

அவமான அர்ச்சனை - நீ

அருகிராமல் எங்கெங்கோ போவதே!

 

சுகமான வாழ்வது

சுடராமல் அணைவதா?

 

சாவின் கரத்தில் உயிர்

சடுகுடு விளையாடி மாய்வதா?

 

நிழலாக எம் கழல் தனை

தொடர்கின்ற

சுற்றமது சுவர்க்கமதை

அணைப்பதா?

 

இமையாக நின்றெமை

சுமையாக நினையாத

அன்னை, அப்பனை அடுத்தடுத்து

அவலமாய் இணைப்பதா?

 

தமையனாய் நின்றவர்

தம்பியாய் வந்தவர்

தமக்கையாய் அணைத்தவர்

தங்கையாய்ச் சிரித்தவர்

நீட்டி முழங்கிப் போக அனுமன்

வாலாய் நீள்பவர்

கவலை மறந்து,

சிரித்து மகிழ்ந்து

இந்நாட்டு மன்னராய் நின்றவர்

அன்பென்னும் ஆகுதியில்

உயிர்தனைச் சலவை செய்து

அவலம் எதுவென மறந்தவர்

பட்... பட்... எனப் பறக்கும்

வேட்டுக்கு

சட்... சட்... என மடிவோம்

எனும் உண்மை

மறந்தவர்

 

ஐயகோ...

என்னென்று சொல்வேன்

அவர் பட்ட அவலம்?

மண்மீது வரிசையாய்

கிடந்ததே அவர்தம் சடலம்

இதுதானோ இறைவன்

எழுதும் சாவுப் படலம்?

இறைவா...

என் கையில்

நீ கிடைத்தால்

நிச்சயம் மரணம்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்