கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா

கவிதை பிறந்த கதை :

மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்)

மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த
மங்கை மலந்திருக்கின்றாள்
மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என்
மனங்கவர் இளமை
உற்றவள் பால் தூது ஏகாயோ?
மல்லிகை சூடி மனதில் என்னை
நிறுத்தக் கூறாயோ?

சந்தனத்தின் சாயல் எடுத்து
வெண்மதியில் முகமெடுத்து
ஆனந்தத்தின் சுளையெடுத்து
அழகூற இலங்கும் மங்கையவள் என்
அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும்
காதல் கொண்ட ஏழை நெஞ்சம்
பாவையவள் படுத்துறங்கும்
மஞ்சமாக வேண்டும்

காதல் கொண்டு அர்ச்சிக்க
கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும்
காளை எந்தன் நெஞ்சம்
களிப்பில் ஊர்ந்து
இன்பம் காணவேண்டும்

மணிப்புறாவே என் எண்ணப்புறா
அப்பெண்புறா பால் செல்லத் துடிக்கிறது
வழி ஒன்று கண்டு கூறமாட்டாயா?

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்