பொய்யில் நிஜங்கள்

கண்ணுக்குள் ஓர் மயக்கம் - உன்னைக்

கண்டதாலோ?

நெஞ்சுக்குள் இன்ப அலைகள் - உன்

வருகை தானோ?

காதினுள் தேன் பாய்கின்றது - உன்

கிளிப் பேச்சுத் தானோ?

 

காலில் நடை தளர்கிறது - நீ

அருகில் இருப்பதாலோ?

உடம்பில் 'சாக்' அடிக்கிறதே - உன்

கரம் மேனியில் படுவதாலோ?

எங்கே நிஜத்தில் மேற்சொன்னதைச்

செய் பார்ப்போம்?

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை