காணவில்லை!

காணவில்லை
இடை(யை)!

இடை,
எதுவென்று
அறியாதவர்கள்
சிவன், 'கை'
தாங்கும்
உடுக்'கை'ப்
பார்க்கவும்

சிவன்
யாரென்று
சிந்திக்க
முடியாதவர்கள்
கவிஞர்களுடன்
கலந்தாலோசியுங்கள்

அவர்கள்,
"அது கற்பனையில்
காணும் விஷயம்"
எனக் கதையளந்தால்

நல்லது...
மறந்துவிடுங்கள்
இல்லாத ஒன்றை
ஏன் தேடுவான்?

___________
யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20164

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை