அழகிய இளவரசி



கண்களைப் பறிக்கும் அழகு உலகை கட்டிப் போட்டதில் ஒன்றும் வியப்பில்லை. கமராக் கண்கள் தவம் கிடந்தன.உலகில் பல தடவை படமெடுக்கப்பட்ட ஒரே பெண்மணி! உலகைக் கட்டிப் போட்ட அந்த அழகு உடலை விட்டுப் பறந்த போது யார் தான் அழவில்லை? நான் அழுதேன்...!அழுதபடி கிறுக்கியது...

பியோனோ வாசிக்கும் விரல்களில் கூட
ஒரு புது இசை பிறந்து வந்தது - அது
டயனாவின் ஆத்மாவை ஆராதிக்கும்
ஆலாபனை என சொல்லாமல் புரிந்தது

கஜானா பல வேண்டி நின்றன - இந்த
அழகுக் கஜானா தனை அள்ளத் துடித்தன
மயான மடிதனில் பெருங் கஜானா
மடிதனில் தவழ்ந்தவள் அமைதியாக உறங்குகிறாள்
எங்களை உறங்கவிடாமல்
விழிக்க வைத்து விட்டு!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை