கோடுகள்
கோடுகளுக்கு இடையில் மறைந்திருக்கும் ஓவியத்தை தேடுகிறேன்… சிறு கை கொண்டு இவள் கிறுக்குகையில் பல விதக் கோடுகள் வந்து பென்சில் கூரோரம் குந்தியிருக்கும் “அடுத்து நான்…” எனக் கெஞ்சித் தவிக்கும்! உருவம் ஒன்றெண்ணி இவள் வரைவதில்லை வரைந்த பின்னால் காணலாம் பல நூறு உருவம் நம் கற்பனை விசாலமெனில்!