Posts

Showing posts from June, 2014

என்னத்தை சொல்ல...?

இடம் தெரியாா் தரம் புரியாா் தகுதி கிடையார் பதவி வேண்டி வலம் வருவார் கிடைக்காது போனால் முகம் சுளிப்பார் காறி உமிழ்வார் இச்சனம் போல் எங்கேனும் கண்டதுண்டா? இலக்கு தான் முக்கியம் நம்மவர் செருக்குக் காட்டி "அவனா தலைவன்..." என கவனில் கல் வைத்தடிப்பார்! எதிரில் பல் இழித்து "ஐயா உம் போல் எவருண்டு..." என்றே நெளிவார்! "எனக்கேன் இல்லை அழைப்பு?" என்றே ஆயிரம் கேள்வி தொடுப்பார் அழைத்தாலோ பல கதை சொல்லிப் புளுகுவார்! பிரிந்து நின்று பருந்து போல் மொய்கின்றார் கூடிச் சேர்ந்து எறும்பு போல் அணிவகுக்க மறுக்கின்றார்! கூடிப் பலர் தேர் இழுக்காவிடின் சாமிக்கேது ஊர்வலம்? ஆசாமி இவனே சாமி ஆக நினைத்தால் அதுவன்றோ அநியாயம்! நோக்கம் ஒன்று அதை நோக்கி நடத்தல் நன்று! தன்னால் இயன்றதை தான் செய்யின் எல்லாம் சரியாகும் முடியாது போனால் கை தட்டுங்கள் தானாய் நடக்கும் எல்லாம்!