Posts

Showing posts from April, 2014

பிள்ளைத் தமிழ்!

கற்ற தமிழ் நான் மறந்தேன் உன் பிள்ளைத்தமிழ் கேட்கையிலே! சொற் தமிழில் எத்தனை சுவை இறைவா இவள் சின்ன இதழில் அது பிறப்பதாலே! அப்பன் மடியில் அமர்ந்து பிரணவப் பொருள் உரைத்தான் பால முருகன் அன்று குப்பன் இவனும் இன்று அப்பேறு பெற்றானே ஆனால் பொருள் தான் எதுவும் விளங்கலையே! விளங்காத போதும் குறையாத இன்பம் எனக்குள் நிறைகிறதே வாழ்வதின் இன்பம் இது தான் எனப் புரிகிறதே!