கசங்கிய காகிதங்களோடு…! - III

நாங்கள்
வாழத் தெரியாதவா்களல்ல!

வாழும்
இடங்களெல்லாம்
விழுதுகள் விட்ட
வியப்புக் குரியவா்கள்!

தமிழனென்றால்
மரம்
பற்றிப் படரும்
கொடிகள் அல்ல!

மறம் பற்றிப்
படரும் மாயாவிகள்…

“பூனை குட்டியைக்
காவுவது போல்…”
என்ற உவமை
எங்களுக்கு மிகவும்
பொருந்தும்

இடங்கள் தான்
வித்தியாசமே தவிர
நடப்புக்கள்
ஒன்று தான்!

**********

கண்களும் கழிவகற்றுகின்றன
கண்ணீா்!

********** 

 

-வளரும்…

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்