யாழ் களக் கிறுக்கல்கள் - VIII

கிறுக்கல் 24:

வாழ்கின்றேன் என்று
தான் சொல்கிறாய்
நீயும்
உண்மையில் வாழ்தல்
என்றால் என்ன?

சூரியனுக்குப் பின்
எழுந்து
பல் துலக்கி
தேநீர் தயாரித்து
குடித்து முடிய
கணினியின்
உயிர் பொத்தான் அழுத்தி
இணையத்தில் கொஞ்சம்
நடந்து திரிந்து
நாலைந்து தொ(ல்)லை பேசி
நேரம் கரைத்து
மதியம் ஏதேனும்
சமைத்துப் புசித்து
குட்டித் தூக்கத்தில்
தேகக் களைப்பகற்றி
மீண்டும் கணினி,இணையம்
இரவுணவு என்று
அதே பழைய பல்லவி
பாடி
நீயும் சொல்கிறாய்
வாழ்கின்றேன் என்று!

என்ன இது
காலத்தின் கை பிடித்து
நடை பழகாமல்
என் விதி
இதுவென மண்வாரித் தூற்றி
சந்தோசம் தொலைக்கின்றாய்!

நான் சொன்னது
கேட்டாய்
சொல்லாத சேதி எல்லாம்
உய்த்தறிந்து
சொல்லாததும் புரிவாய்!

உலக இயக்கம்
இம்மியும் நிற்காது
விலகி நிற்பதால்
விந்தைகள் நடக்காது
விம்மி நீ அழுதால்
கையொன்று நீளவேண்டும்
உனை நோக்கியும்!
தொட்டுத் துடைக்க
கையொன்று நீளும்மெனின்
பொய்கை போல் நீர் கொண்டு
கண்கள் அழுவதில் கூட
சுகமுண்டு!

 

-----------------

கிறுக்கல் 25:

எதிர்பார்ப்பு
ஏதுமில்லை எனக்குள்
கண்ணே உன் கை விரல்
பிடித்து நடப்பதுவும்
கண்ணசைவில் காலங்கள்
மறப்பதுவுமல்லால்
வேறெந்த எதிர்பார்ப்பும்
இல்லை எனக்குள்!

புதிர்போல இவ்வாழ்க்கை
முடிச்சுக்கள் அவிழ்கின்ற போது
அர்த்தங்கள் புரியும்!

எதிர்படும் இடர் எல்லாம்
என் அருகில் நீ
இருந்தால் விரைந்தே
ஓடுமடி!

கண்ணே கடைசிவரை
காதலிப்போம்
கட்டிலறைப் போர்
தொடுப்போம்!

 

-----------------

கிறுக்கல் 26:

கொஞ்சி
விளையாடலாம் தான்
அஞ்சி அஞ்சி
நீ போனால்
ஆவதெப்போது?

பஞ்சி பார்க்காது
பக்கத்தில் வாவேன்
கஞ்சி குடித்தபடி
கதைக்க
பல கதை உண்டு!

குஞ்சி பார்த்தால்
குடும்பத்திற்கே
தெரியவரும்...
ஆதலால் யாரும்
பார்க்காமல் என்னிடம்
வா நீ!

கை கோர்த்தபடி
பொது மைதானத்தில்
நடை பழக
எனக்கு விருப்பமில்லை
மெல்லிய இருட்டில்
நட்சத்திர வானம்
பார்த்தபடி
நடப்பதெனில் கொள்ளைப்
பிரியம்...
என்ன ஒன்று
கூடவே வெண்ணிலாவும்
வரும்...

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்