யாழ் களக் கிறுக்கல்கள் - VII
கிறுக்கல் 20:
தவிக்கின்றேன்
மெத்தை மேல் நான்
அத்தை பெத்த
அருமை அத்தானே
அங்கங்கே தொடுகின்றாய்
அங்கங்கள் வலிக்காமல்...
இதழில் இளைப்பாற
வேண்டுமென்கிறாய் - என்
நுதலில் இதழ் ஒத்தடம்
தருகின்றாய்
மஞ்சமென என்
நெஞ்சில் தலைசாய்கின்றாய்
கொஞ்சமோ நீ
செய்யும் கூத்து...?
இன்னும் இன்னும்
வேண்டுமென கெஞ்ச
வைக்கின்றாய்
நொடிக்கொரு முறை
சொர்க்கத்தில்
தூங்கவைக்கின்றாய்
எல்லாம் சொர்பனமாய்
தோன்றுதடா கண்விழிக்க
நிஜத்தில் எப்போதடா
புரிவாய் எல்லாம்?
-----------------
கிறுக்கல் 21:
தேடுகின்றாய் நீயும்
எனக்குள் உறங்கும்
இன்னொருவனை...
சூடுகின்ற மலரிலும்
சுந்தரத் தமிழிலும்
பாடுகின்ற பட்சியின்
குரல் விநோதத்திலும்
என் வாசம் கலந்திருக்கும்!
காது திருப்பி
மெய் சிலிர்த்து
மனசுக்குள் உள்வாங்கு
வடிவாய் விஷ்வரூபமாவேன்!
நண்பனாய் நான் சிரிப்பேன்
நல்ல உள்ளதோடு
உனை அணைப்பேன்!
கண்களை மூடி
நீ தூங்கு
கண்டறியாத உலகம்
காறியுமிழும்
விடு...
விழி மூடி தியானி
வழி காட்டாத
உலக செய்கை
உனக்கேன் பயணி!!!
-----------------
கிறுக்கல் 22:
பயணி
கஜனி முகமது போல்
எத்தனை முறை
வேண்டுமெனினும்
பயணி
கோட்டை உனக்குத் தான்!
வீணே சயனித்திருப்பதிலும்
'விசர்'க் கதை பேசி
சாதாரண நரனாய்
நீ இருப்பதிலும் என்ன பயன்?
நடந்தால் தான் நதி
நுரை கக்கினாலும்
கரை தொட்டால் தான் கடல்
குறை இருந்தாலும்
உனக்குள் நம்பிக்கை
நிரப்பி
கறை யளித்து
பிறையென வளந்து
முழு நிலவாய்
ஒளி கொடுத்தால் தான்
நீ மனிதன்!
-----------------
கிறுக்கல் 23:
வீழமாட்டோம்
அண்ணன் சொல்
மீறமாட்டோம்
காலனாவோம்
கரிகாலன்
ஆணையேற்று
சிங்களஞ் சேனை
முடித்து
வெற்றி வீரனாவோம்!
மங்களம்
பாடவேணும்
மறப் புலி வீரம்
காணவேணும்
அங்கிள்
அன்ரி எல்லோரும்
கைசேருங்கோ
எம் தேசத்தின்
கங்குல் விடியும்
கோலம் பாருங்கோ!
Comments